Wednesday, July 30, 2014

வள்ளலார்...பாரதி...... நிகழ்த்துதல்.......எஸ்.சண்முகம்.

             


                                   
                                    1             

               எம்.டி.எம். பாரதியார் மகாகவியா? என்ற விவாதம் குறித்த உங்களது கட்டுரைக்கான உரையீடாக இவ்வுரையாடலை கொள்கிறேன்.பாரதி குறித்த உங்களது கட்டுரை நுண்புல-மிக்க நவீனகவிதையின் நிகழ்த்துதல் ஊடுகோணத்தை சுட்டுகிறது.உங்களது கட்டுரையில் சொல்லியுள்ளதுபோல் சங்க இலக்கிய கவிதைகளில் நிகழ்த்துதல் தன்மைகள் உட்பொதிந்துள்ளன என்பது ஆர்வத்தை தூண்டுகிறது.







                             

அகம்- “தலைவன் மற்றும் தலைவிஎன்ற இரு கற்பனா கட்டமைப்பு அல்லது ஒரு கவித்துவ ஊடுவேளியாக்க் கொள்ளலாம்; அல்லது நாடகிய பாத்திரமாகக் (Dramatis Personae) கொள்ளலாம். அல்லது கவிதையின் மொழியும் பருண்மை என்பதுகூட ஒரு கோணத்தில் மொழியின் நிகழ்த்துதல் எனலாம். இத்தன்மை கவிதை மரபான  வழக்காற்றில் வகைமை மற்றும் பாலினம்  இடையிலான மொழியின் நடனம் எனலாம். இக்கவிதை எழுதுமுறைமை வழிவழியாக (வாழையடி வாழையாக) தமிழ்க்கவிதையின் மரபோடு இயைந்து பயின்றுள்ளது. இம்முறைமை சில தருணங்கள் புறக்கவிதைகளையும் தனக்குள் அமிழ்ந்து போகச் செய்துள்ளது. பிரத்யேகமாக இப்பண்பு தனதேயான தனிப்பண்பான trope ஆக தன்னை வகைமைப் படுத்திக் கொண்டு; நாயகன் – நாயகி பாவமாகவும், தோழிக்கூற்று என்பது உரையீட்டாளரது குரலாகவும் (interlocutor)ஆக உருக்கொண்டுள்ளது.

மேற்கூறியவை தமிழ் பக்தி இலக்கிய பிரதி தொகுதியினுள் உட்பொதிந்துள்ளது. குறிப்பாக திருஞான சம்பந்தரின் வரிகளான “என் உள்ளம் கவர் கள்வன்என்பதிலும்; மாணிக்கவாசகரின் “திருகோவையார்நாம் விவாதித்துவரும் இக்கவித்துவப் பண்பை நன்கு விரிதுரைக்கும் கையேடாக திகழ்கிறது. இங்கு என் மனதிலுள்ள ஒரு வரியை இங்கு குறிக்கிறேன்.

"சொற்பால்முதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினத்தெய்வந் தந்தின்று நாணிவளாம் பகுதிப்பொற்பா
ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பில்
கற்பா வியவரை வாய்கடி தேட்ட கள்வகத்தே"

இக்கவிதை தன் கவித்துவ பாய்ச்சல்/ பறத்தலை அடுத்த நிலைகளுக்கு இட்டுச்செல்கிறது. இதன் மூலம் புதிய கதையாடல் வலைப்பின்னல் உருவாகி அதன் மூலமாக இனிவரும் காலத்திற்கான கவித்துவத்தைக் கட்டமைக்கிறது. இது சொல்லப்படுவதற்கும் அதன் சுவைக்கும் வேறுபாடில்லை என்பதுபோல் வருகிறது. புண்ர்ச்சியால் ஏற்படும் இன்பநுகர்வதன் பொருட்டு நான்xஇவள் என்பதை இருமையான தன்xபிற என்பதின் அழகை யாரறிவார் துக்க்கும் நானே அறியேன் என பொருள்கூறும் பகுதியாக வருகிறது. இறைவன் பிற என்ற நிலையின் இன்புணர்வை அறிய பிறபாலினமாகத்தன்னுள்ளே பெண்ணை மறுபுனைவு செய்து கொள்கிறார். ஆயினும் இரண்டு நிலையும் தன்னுள்ளே பெண்ணை மறுபுனைவு செய்து கொள்கிறார். ஆயினும் இரண்டு நிலையும் தன்னுள்ளே ஒன்றோடு ஒன்றாக சங்கமித்து உள்ளதையும் அர்த்தநாரீசத்தையும் இது சுட்டுகிறது இக்கவித்துவப் பண்பு பாலின மீறல் கதையாடலாகும். இதைப்போன்றே ஆழ்வார்களும் ஆண்டாளும் இம்மரபின் அதீத கவித்துவச் சாத்தியப்பாடுகள். இவ்வழியில் வந்த வேதாந்த தேசிகர் தனது கவித்துவத்தால் கோயிலை கடவுளின் உடலாக மொழிந்துள்ளார். இது குறித்து விரிவாக ஆய்வு நூலின் காணலாம். இதன் தலைகீழ் சாத்தியபாடாகத் திருமூலர் திருமந்திரத்தில் ஊண் உடம்பு ஆலயம் என்று விரிவுபடுத்டுகிறார். சித்தர்கள் மரபில் இது ஆழமாகப் பதிந்துள்ளது. குற்ப்பாக வள்ளலார் தன் திரு அருட்பாவின் ஆறாம் திருமுறையில் இறையியல் நிலைபாடான இறைஎன்பதை எல்லை கடந்த சாத்தியமாக உருமாற்றி மனத்திறன் கடந்த சாத்தியமாக உருமாற்றி மனத்திறன் கடந்த நிலைக்குக் கொண்டு செல்கிறார். மேலும் மதசார்பற்ற நிலைபெறலுக்கு எல்லாம் வல்ல இறைவனை நகர்த்துகிறார். தனது அனுபூதிக் கவிதையான வானத்தின்மீது மயிலாட்க கண்டேன் மயில் குயிலாச்சுதடி என்பதில் கவிதை அனுபவத்தின் விளிம்பை தொட்டு இறைநிலையைக் கவிதையின் நிகழ்த்துதல் என்னும் அனுபவ மாறாட்டமாக மாற்றுகிறார்.

வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளின் கவித்துவத்தோடு சைவம் இறுதிப்படுகிறது. அல்லது சைவ இறையியல் ஒருவகையான மூடுதல் நிக்ழ்கிறது. வேறு கோணத்தில் பார்த்தால் சைவத்தின் நீட்சி எனக்கொள்ளவும் இடமுண்டு. இப்பொருத்தப்பாட்டின் அடிப்படையில் வள்ளலார் தனது முந்தைய கவித்துவத்தை இறுதியடையச் செய்துவிட்டு நிகழ்த்துதல் கதையாடல் என்ற புதிய கவித்துவ வெளிக்குள் பாய்கிறார் . இவரது ஆறாம் திருமுறையின் மற்றோர் பண்பு நாயகன் நாயகி பாவத்தில் புதிய பரிமாணம் பெறுகிறது. தன்னை பெண்ணாகவும் இறைவனை அணாகவும் மாறாட்டம் செய்தல் என்பதில் போகிறது. நாதன் என்னைக் கூடினார் என்று மெய்மறசங்கம்ம் நிக்ழ்த்தப்ப்டுகிறது. தன்னைப் பெண்ணாக பாவிக்கும் வள்ளலாரது கவித்துவச் சாத்தியபாடு பாரதியில் கண்ணன் என் காதலனாக நீள்கிறது.


                                 2

மேற்கண்ட மரபின் தொடர்ச்சியாக பாரதியார் நிகழ்த்துதல் கதையாடல் பண்பைத் தி க்வித்துவத்திற்குள் வரித்து கொண்டு மேலும் விரிவடையச் செய்கிறார். இதைக் கூடுதல் நிகழ்த்துதல் கவிப்பண்பென கூறலாம். ஆனால், பாரதியின்  வசன கவிதைகள் அதிகமாக வேதக் கவித்துவத்தால் (ரிக்) பாதிப்படைந்தன என்பதை மறுப்பதற்கு இல்லை. இதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். பாரதி சங்க்க் கவிதைகளைப் படித்தவரா? என்பதற்குத் தெளிவான தடயம் ஏதும் இல்லை. ஆருனும் பாரதி, கம்பர், இளங்கோ, வள்ளுவர், ஆழ்வார்கள், சித்தர்கள், தாயுமானவர், பட்டினத்தடிகள், வள்ளலார் ஆகியோரால் பாதிப்படைந்துள்ளார்.

இதன்வழியில் பாரதியின் கண்ணன் பாட்டு, பாடல் அமைகிறது. “கடுமையுடையதடி எந்தநேரமும் காவல் உன் மாளிகையில் அடிமைப் புகுந்தபின்னும் எண்ணும்போது அங்கு வருவதற்குகில்லையடிஎன்பதில் பாரதி புதுச்சேரிக்குத் தன்னைப் பெயர்த்துக் கொண்ட நிலையில் அங்கிருந்து தன் தாய்நாட்டுக்கு வர இயலாத தவிப்பையும் அதன் நிலப்பிரப்பையும் தனது காதலியாக உருமாற்றம் செய்கிறார். இப்பண்பு நிகத்துதல் கவித்துவத்தில் புதிய சேர்க்கை.




                                   3
எம்.டி.எம் உங்களது கட்டுரையை வாசித்தபோது பல வருடங்களுக்கு முன்பு நான் படித்த புத்தகம் நினைவிற்கு வருகிறது. அது மல்லார்மேயின் கவிதையின் நிகழ்த்துதல் கவித்துவம் குறித்த்து. இப்புத்தகத்திலிருந்து சில குறிப்புகளை எனது குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். அதில் ஓன்றை சொல்லி முடிக்கிறேன்.

“ பிரதி எவ்வாறு நிகழ்த்துதலின் பதிவை நம்முன் உருவாக்குகிறதோ அதேபோல் நிகழ்த்துதல் பிரதியின் பதிவை நம்முன் உருவாக்குகிறது.

No comments: